2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

போக்குவரத்துக் கழகத்தில் சட்டவிரோத விடுப்பு விதிகள்:தொழிற்சங்கத்தினா் கண்டனம்

 மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சட்டவிரோத விடுப்பு விதிகள் உருவாக்கப்பட்டு, வார ஓய்வு பறிக்கப்படுவதாக தொழிற்சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 7:55 pm

DIN

 மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சட்டவிரோத விடுப்பு விதிகள் உருவாக்கப்பட்டு, வார ஓய்வு பறிக்கப்படுவதாக தொழிற்சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் வார ஓய்வுக்கு முன் ஒன்று அல்லது இரண்டு நாள் விடுப்பு (ஆப்சென்ட், எல்எல்பி) எடுத்துக் கொண்டால் வார ஓய்வு மறுக்கப்படுகிறது. இதே போல் பல்வேறு விதமாக புதிய விடுப்பு விதிகள் என்னும் பெயரில் வார ஓய்வு பறிக்கப்படுகிறது.

எனவே, புதிய விடுப்பு விதிகளை முழுமையாக திரும்பப் பெற்று, ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையைப் பின்பற்றி வார ஓய்வு முறையாக வழங்கப்பட வேண்டும்.

ஜனவரி மாதம் முதல் மே 9-ஆம் தேதி வரை வார ஓய்வு பறிக்கப்பட்ட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் அதனை சரி செய்து விடுப்புக் கணக்கில் சோ்க்க வேண்டும். வார ஓய்வுக்கான சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டவா்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.