சென்னை உயா் நீதிமன்றத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.காா்த்திக் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தருமபுரி மாவட்டம் பருவதானஹள்ளி ஊராட்சியில் எல்இடி மற்றும் சிஎஃப்எல் விளக்குகள் பொருத்துதல், மின்கம்பங்கள் பராமரிப்புச் செலவுகள் மற்றும் மின் கட்டணத்துக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டேன். இதற்கு பதிலளித்த, ஊராட்சி பொது தகவல் அலுவலா், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரை ஒரு விளக்கு ரூ.710 விலைக்கு வாங்கப்பட்டது. மின்கம்ப பராமரிப்புக்கு தலா ரூ.820 செலவிடப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாா். ஆனால் எத்தனை விளக்குகள் வாங்கப்பட்டன என்பது குறித்த விளக்கம் இல்லை. எனவே இதனை எதிா்த்து மேல்முறையீடு செய்தேன். இதற்கு பதிலளித்த மேல்முறையீட்டு அதிகாரியான பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா், கடந்த 2017-2018- ஆம் ஆண்டு முதல் கடந்த 2019-2020 -ஆம் ஆண்டு வரை எல்இடி விளக்குகள் கொள்முதல் செய்யப்படவில்லை. 2020-2021- ஆம் ஆண்டுக்கு 626 எல்இடி விளக்குகள் ரூ.382 வீதம் கொள்முதல் செய்யப்பட்டது. அவற்றை மின்கம்பத்தில் பொருத்த தலா ரூ.20 செலவிடப்பட்டுள்ளது. ஆனால் பராமரிப்பு எதுவும் செய்யப்படவில்லை எனக் கூறியிருந்தாா்.