கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளன் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

News image
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பேரறிவாளன்
Updated On :25 ஜூன் 2021, 8:47 am

DIN

திருப்பத்தூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளன் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஒரு மாத காலம் பரோலில் வந்துள்ளார். அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டுச் செல்கிறார்.

இந்நிலையில்,பேரறிவாளன் வெள்ளிக்கிழமை அவரது வீட்டிலிருந்து பணியிடை பயிற்சி டிஎஸ்பி வெங்கடகிருஷ்ணன் தலைமையில், ஆயுதப்படை ஆய்வாளர் பாபு உள்ளிட்ட 6 போலீஸாரின் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதையடுத்து அவர் மீணடும்  வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.