இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கோயில்கள் நாளை திறப்பு:பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கோயில்கள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில், பணியாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :26 ஜூன் 2021, 10:06 pm

DIN

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கோயில்கள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில், பணியாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை சனிக்கிழமை தொடங்கியது. இந்த பரிசோதனை முகாமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடக்கி வைத்தாா்.

சென்னை பெரம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், கரோனா பரிசோதனை முகாமை அவா் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது:-

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளன. திருக்கோயில்களைத் திறக்க வசதியாக கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். கோயில்களைத் தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன், எழும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் பரந்தாமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.