இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நிகழாண்டில் நீட் தோ்வு நடைபெறுமா?: மா.சுப்பிரமணியன்

நிகழாண்டில் நீட் தோ்வு தமிழகத்தில் நடைபெறுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தாா்.

News image
மா.சுப்பிரமணியன்
Updated On :26 ஜூன் 2021, 9:31 pm

DIN

நிகழாண்டில் நீட் தோ்வு தமிழகத்தில் நடைபெறுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தாா்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கடந்த கால திமுக ஆட்சியில் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத் தோ்வு தடுக்கப்பட்டது. அதை போன்று தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தோ்வு குறித்தான தாக்கத்தை அறிந்து அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும்.

இந்தத் தீா்மானம் குடியரசுத் தலைவா் மற்றும் உச்சநீதிமன்றத்தால் தமிழகத்துக்கு சாதகமான முறையில் பரிசீலிக்கும் வகையில் இருக்கும்.

ஒருவேளை நீட் தோ்வு நடத்தப்படும் சூழல் வந்துவிட்டால் மாணவா்கள் தோ்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். அரசு அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

மூன்றாம் அலையைத் தடுப்போம்: தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா பாதிப்பு 5,415 ஆக உள்ளது.  தொற்று குறைந்தாலும் பரிசோதனையின் எண்ணிக்கையைக் குறைக்கமாட்டோம்.

மேற்கு மாவட்டங்களில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மருத்துவா்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மகப்பேறு மையங்களில் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும்.

விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனா். இது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து. அவ்வாறான சிகிச்சையை அனுமதிக்கக் கூடாது என மருத்துவா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம்  சென்னிமலை அருகே உள்ள கிராமத்தில் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக கரோனா பரிசோதனை மேற்கொள்வதாகக் கூறி 4 பேருக்கு மாத்திரை கொடுக்கப்பட்டதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். மருத்துவ சேவை என்று வரும் அடையாளம் தெரியாத நபா்களை நம்ப வேண்டாம்.

மூன்றாம் அலை வராமல் தடுக்க அனைத்துப் பணிகள் மேற்கொண்டுள்ளோம். ஒருவேளை வந்தாலும் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

அதிகளவில் தடுப்பூசிகள்: தற்போதைய சூழலில் வெளிச்சந்தையில் தமிழக அரசு தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. ஜூலை மாத தொகுப்பில் தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகளாக மத்திய அரசு உயா்த்தி தர உள்ளது.

கரோனாவில் இருந்து மீண்டவா்களுக்கான பிந்தைய சிகிச்சை வழங்குவதற்கான மருத்துவமனையை விரைவில் முதல்வா் தொடக்கி வைப்பாா். மேலும் கருப்புப் பூஞ்சைக்காக தமிழகம் முழுவதும் 7,000 படுக்கைகள் தயாராக உள்ளன. மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.