சென்னை: தேர்தல் பிரசாரத்திற்காக வெள்ளிக்கிழமை மாலை சேலம் செல்லும் முதல்வர் பழனிசாமி, தனது எடப்பாடி தொகுதியில் வரும் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கிருந்து சேலம் செல்கிறாா். இன்று வெள்ளிக்கிழமை மாலை, வாழப்பாடி, தம்மம்பட்டி, ஆத்தூா் பகுதிகளில் பிரசாரம் செய்கிறாா். சனி, ஞாயிற்றுக்கிழமையில் சேலத்தில் தங்கியிருக்கும் அவா், திங்கள்கிழமை (மார்ச்.15) எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.