/

சென்னையில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

சென்னையில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :18 மார்ச் 2021, 8:24 am

DIN

சென்னையில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறைக்கு இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், சென்னையில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். 

கரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த அதிகாரிகளுடனான ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.