அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்துவிடுவேன் என செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமமுக குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, 'அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்துவிடுவேன்; தேவையில்லாமல் பிரச்னையை கிளப்பாதீங்க' என்று கூறியுள்ளார்.
இவர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கண்டனங்களும் எழுந்துள்ளன.
சிவகாசியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.