தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கரோனா: ராதாகிருஷ்ணன்

சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image
100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கரோனா: ராதாகிருஷ்ணன்
Updated On :22 மார்ச் 2021, 9:06 am

DIN


சென்னை: சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் முன்பு நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்கு கரோனா பேரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால், முகக்கவசம் அணிவதை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். தகுதியானவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், 10 நாள்களுக்கு முன்பு வரை 100 பேரை பரிசோதித்தால் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது 100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது. எனவே கரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது  என்று சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.