அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் அச்சிடப்பட்ட தாள் பொருத்தும் பணி புதன்கிழமை காலை தொடங்கி நடைபெறுகிறது. அதன்படி, ராசிபுரம் தொகுதியில் தலா 399 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 432 விவிபேட் இயந்திரங்களிலும், சேந்தமங்கலம் தொகுதியில் தலா 411 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 445 விவிபேட் இயந்திரங்களிலும், நாமக்கல் தொகுதியில் தலா 453 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 453 கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 491 விவிபேட் இயந்திரங்களிலும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.