மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உடுமலை அருகே யானைகளைத் தாக்கும் மலைவாழ் மக்கள் (விடியோ)

உடுமலை அருகே உள்ள மலைவாழ் மக்கள் சிலர் யானைகளை குச்சி மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

News image
Updated On :6 மே 2021, 7:18 am

DIN

உடுமலை அருகே உள்ள மலைவாழ் மக்கள் சிலர் யானைகளை குச்சி மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

உடுமலை வனப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்நிலையில் கோடை காலத்தில் வறட்சியான சூழ்நிலையில் குடிநீரைத் தேடி யானைகள் வனத்திலிருந்து வெளியே வருவது வழக்கம்.

இந்நிலையில் புதன்கிழமை மூன்று யானைகள் குடிநீருக்காக வனத்திலிருந்து திருமூர்த்தி அணையை நோக்கி வந்துள்ளன. அப்போது திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அந்தப்பகுதியில் இருந்துள்ளனர். அதில் சிலர் யானைகளை குச்சி மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பீதியான யானைகள் பிளிறியபடி நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் ஓடின. இதைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் அந்த யானைகளை மலைவாழ் மக்கள் கொடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பொதுமக்களையும் வன ஆர்வலர்களையும் நெஞ்சை பதற வைக்கும் இந்தக் காட்சிகளை பார்த்த வனத்துறையினர் உடனடியாக திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும் யானைகளை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து கேட்டபோது வனச் சட்டத்தின்படி இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட உள்ளதாக மாவட்ட வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் தெரிவித்தார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.