கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முழு ஊரடங்கு: தேனி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் சாலைகள் அடைப்பு

தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொதுமுடக்கம் காரணமாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் 2 மலைச்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன.

News image
முழு ஊரடங்கு: தேனி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் சாலைகள் அடைப்பு
Updated On :16 மே 2021, 9:50 am

DIN

கம்பம்: தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொதுமுடக்கம் காரணமாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் 2 மலைச்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன.

தமிழகம் மற்றும் கேரளத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகள் கம்பமெட்டு அடிவாரம், லோயர் கேம்ப் நுழைவு பகுதியிலேயே அடைக்கப்பட்டன.

இரு மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக மருத்துவ சேவைக்கான வாகனங்கள் செல்வதை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றன.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு பால் மற்றும் காய்கனிகள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இரு மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் அத்தியாவசிய வாகனங்கள் செல்வதை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.