கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சியில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News image
திருச்சியில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
Updated On :16 நவம்பர் 2021, 5:59 am

DIN

திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வயலூர் சாலையில் உள்ள வினோபா நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், உய்யக்கொண்டான் வாய்க்காலின் கரைகளை பலப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிக்கலாமே.. என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?

இதன் தொடர்ச்சியாக, ஆதி நகர், உறையூர் பகுதியில் உள்ள பாத்திமா நகர், தியாகராஜன் நகர், ஏ.யூ.டி.காலனி, குழுமணி சாலையில் லிங்கம் நகர், செல்வம் நகர் ஆகியபகுதிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து, கருமண்டபம் பகுதியில் அசோக் நகர், வசந்தம் நகர், காந்தி நகர், டோபி காலனி, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார். 

மழை தண்ணீர் தேங்கியிருந்தால் உடனடியாக வெளியேற்றவும், தண்ணீர் அகற்றிய பிறகு தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமிநாசினி மருந்துகளை தெளித்து பராமரிக்கவும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது,  திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.