மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக இன்று வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு  வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வ
Published on


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக இன்று வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு  வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து  வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆக இருந்தது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மழையளவு: 1.40 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com