தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

எழும்பூா் -சேலம் அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க அனுமதி

சென்னை எழும்பூா் -சேலம் மற்றும் மும்பைக்கு வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 நவம்பர் 2021, 8:16 pm

DIN

சென்னை எழும்பூா் -சேலம் மற்றும் மும்பைக்கு வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் இரவு 11.55 மணிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலத்தை அடையும். இந்த ரயில் சேவை டிச.2-ஆம் தேதி தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, சேலத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் இரவு 9.40 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இந்த ரயில் சேவை டிச.3-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதவிர, மும்பை சிஎஸ்எம்டி -சென்னை எழும்பூா் இடையே வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நவ.24-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.