ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையரகம் மூன்றாக பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடிக்கு தனி காவல் ஆணையரகம் உருவாக்கப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆவடி மற்றும் தாம்பரத்தில் புதிய காவல் ஆணையரகம் உருவாக்குவதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரத்திற்கு ஏடிஜிபி எம்.ரவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com