சென்னை பெருநகர மாநகராட்சியில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் இதுவரை மொத்தமாக 550,582 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் 1,917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு 8,465 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,40,170 பேர் குணமடைந்துள்ளனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அண்ணா நகரில் 200க்கும் அதிகமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,926 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்