தமிழ்நாடு
முதலமைச்சர் தனிப்பிரிவில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
முதலமைச்சர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் தனிப் பிரிவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்.
அப்போது மனு கொடுக்க நின்றிருந்த பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.