இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கார் ஓட்டுநர்களே.. கவனம்.. மிக கவனம்; விடியோ வெளியீடு

கார் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு விடியோ ஒன்றை ஈரோடு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News image
கார் ஓட்டுநர்களே.. கவனம்.. மிக கவனம்; விடியோ வெளியீடு
Updated On :6 அக்டோபர் 2021, 9:50 am

DIN


கார் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு விடியோ ஒன்றை ஈரோடு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், காரில் வரும் வசதிபடைத்த நபர்களின் உடைமைகளை ஒரு மோசடி கும்பல் எவ்வாறு ஏமாற்றி அவர்களுக்குத் தெரியாமல் பறித்துச் செல்கிறது என்பதை, விடியோ மூலம் விளக்கியுள்ளது காவல்துறை.

இதனால், உண்மையிலேயே நாம் ஆபத்திலிருந்தாலும் கண்டுகொள்ளாமல் செல்லும் நிலை கூட ஏற்படலாம். ஆனால், சூழ்நிலையை கவனித்து, நிதானித்து செயல்பட வேண்டும் என்பதைத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த விடியோவில், காரின் முன் சக்கரம் பஞ்சர் என்று இருசக்கர வாகன ஓட்டிகள் சொல்வதும், அதை அவர் பரிசோதிக்கும் போது ஒரு பெண் முகவரி கேட்பதும். அப்போது வேறு திசையிலிருந்து வரும் ஒருவர் அவரது காரின் கதவை திறந்து அதற்குள்ளிருக்கும் பொருளை திருடுவதும் விடியோவில் பதிவாகியுள்ளது.

இதில், ஓரிடத்தில் கூட ஏமாற்றப்பட்டவருக்கு நாம் எங்கே, எப்போது ஏமாற்றப்பட்டோம் என்பது புரிபடாது. அந்த அளவுக்கு திட்டமிட்டு ஒரு மோசடிக் கும்பல் இவ்வாறு செயல்படுகிறது. 

எனவே, கார் ஓட்டிகள், இதுபோன்று முன்சக்கரம் பங்சர் என்று சொன்னதும், அங்கேயே வாகனத்தை நிறுத்திவிடாமல், சிறிது தள்ளிச் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு டயர்களை பரிசோதிப்பது சாலச்சிறந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.