அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உள்ளாட்சித் தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :6 அக்டோபர் 2021, 1:12 pm

DIN

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 6 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 755 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும், 1,577 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான 12,252 பதவிக்கும் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் வாக்களிக்கும் வகையில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு வந்தவர்களுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வரிசையில் நிற்கவைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணி:

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3,777 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

17,130 காவலர்கள், 3,405 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 20 ஆயிரத்து 535 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.