/

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.67அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,019 கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.19 அடி உயர்ந்துள்ளது.

News image
மேட்டூர் அணை.
Updated On :28 ஜனவரி 2024, 4:19 am

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,019 கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.19 அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,168 கன அடியிலிருந்து 15,019 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 39.67 டி.எம்.சி ஆக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.