அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடி: அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம்

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தலைமையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நட

News image
புதுச்சேரி சட்டப்பேரவை
Updated On :9 அக்டோபர் 2021, 8:50 am

DIN

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தலைமையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்தநிலையில் புதுச்சேரியில் அவசரமாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தினங்களில், பண்டிகை காலங்கள் மற்றும் வார்டு இட ஒதுக்கீடு உள்ளிட்ட குளறுபடிகள் உடன் தேர்தல் நடைபெற எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக தேர்தல் துறையில் முறையிட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தலைமையில் அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடிகளை களைய வேண்டும், பண்டிகை காலங்களில் அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை சீரமைக்க வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை கேட்டறிந்து, தேர்தல் துறை செயல்பட வேண்டுமென கூட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.