மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மரணம்

ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 40 வயது பெண் யானை மரணமடைந்ததாக வனத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

News image
கோப்பிலிருந்து
Updated On :13 அக்டோபர் 2021, 5:49 am

PTI


ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 40 வயது பெண் யானை மரணமடைந்ததாக வனத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட கோவில்நத்தம் ஓங்கேபள்ளம் பகுதியில், பெண் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துக் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும், யானையை பரிசோதித்தனர். யானையை முழுமையாக சோதனை செய்த கால்நடை மருத்துவர்கள், வயது காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த யானை, பள்ளத்தில் விழுந்ததில், எழுந்து வர முடியாமல் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதில் சந்தேகத்துக்கிடமான வகையில் எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. யானையின் உடலை அடக்கம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.