தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாழப்பாடி அருகே மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணிவரை மூடுபனி உறைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

News image

வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் உறைந்து காணப்பட்ட மூடுபனி.

Updated On :21 அக்டோபர் 2021, 4:15 am

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணிவரை மூடுபனி உறைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதுமட்டுமின்றி, பல இடங்களில் நள்ளிரவு வரை மழைத் தூறல் தொடர்ந்ததால் கடும் குளிர் வீசியது.

Story image

சேலம் -உளுந்தூர்பேட்டை  தேசிய நெடுஞ்சாலையி,ல் முகப்பு விளக்குகளை எரியச் செய்து ஊர்ந்து சென்ற வாகனங்கள்.

இந்நிலையில், வாழப்பாடி அருகே சேஷன்சாவடி ராகவேந்திராபுரம், செல்லியம்மன் நகர், முத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி வரை மூடுபனி உறைந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அனைத்து வாகனங்களிலும் முகப்பு விளக்குகளை எரிய செய்து சாலையை கவனமாக கடந்து சென்றனர்.

மலைப் பிரதேசங்களில் காணப்படுவதைப் போல, வாழப்பாடி பகுதியில் மூடுபனி உறைந்துறைந்து காணப் பட்ட காட்சி இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மூடு பனியை, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.