பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சலுகை: எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீஸார் பணியிடை நீக்கம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில் உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததாக ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேலம் திரும்பும் வழியில், சிறை வழிக்காவல் விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி கைதிகள் அவர்களின் உறவினர்களை சந்தித்தனர்.








