அருப்புக்கோட்டை: நியாய விலைக்கடை, பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்த அமைச்சர்
அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நியாய விலைக்கடை, பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் திறந்துவைத்தார்.

அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான புதிய நியாயவிலைக்கடைக் கட்டடத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.






