புது தில்லி: தமிழ்நாட்டிற்கு 1.04 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதம் மத்திய அரசு வழங்கவுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், புது தில்லியில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கேரள மாநிலத்தையொட்டிய எல்லையோர மாவட்டங்களில் 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களை திறப்பது குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்று கூறினார். தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதர மையங்கள் அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன் வைத்தேன். தமிழ்நாட்டிற்கு 1.04 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதம் மத்திய அரசு வழங்கவுள்ளது என்று அமைச்சர் கூறினார்.