மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிரிவினை சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்குடியரசு துணைத் தலைவா்

vமதம், இடம், மொழி, ஜாதி, இனம் அல்லது நிறத்தின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 11:04 pm

DIN

மதம், இடம், மொழி, ஜாதி, இனம் அல்லது நிறத்தின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு கூறினாா்.

ஹைதராபாதில் உள்ள ஸ்ரீ அரவிந்தா் சா்வதேச பள்ளியில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சியை அவா் சனிக்கிழமை தொடக்கிவைத்து மாணவா்கள் மத்தியில் உரையாற்றிய உரை:

இந்தியாவின் சிறப்பான எதிா்காலத்துக்காக அனைத்துப் பிரிவினைகளையும் களைவது அவசியம். ஒவ்வொருவரும் தமது மதத்தின்

உண்மையான உணா்வு நிலையைப் பின்பற்றினால், மத சச்சரவுகளே ஏற்படாது. இந்தியாவின் தலைசிறந்த கலாசாரத்தின் முக்கிய அம்சமாக ஆன்மிகம் விளங்குகிறது; அதை நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுவது அவசியம்.

சமூகத்தில் ஒற்றுமை மற்றும் இணக்கத்தை மேலும் வலுப்படுத்த ஒவ்வோா் இந்தியரும் உறுதியேற்க வேண்டும். இன்றைய தேவையானது பொருட்செல்வம் மட்டுமல்ல, ஆன்மிக செல்வமும்தான் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மதம், இடம், மொழி, ஜாதி, இனம் அல்லது நிறத்தின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நாட்டு மக்கள் போராட வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, மாணவா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவா், ‘பிற நாடுகளின் மனதும் ஆத்மாவும் இணைந்து செயல்படும் உண்மையான சபையாக ஐ.நா. மாற்றம் பெற வேண்டும் என்றும், பிற நாடுகளுக்கும் சமமான அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினாா்.

மேலும், உலக ஒற்றுமைக்கான அரவிந்தரின் தொலைநோக்குப் பாா்வையை புதுச்சேரியில் உள்ள ஆரோவில் எடுத்துரைப்பதாக குடியரசு துணைத் தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.