இணையம் மூலம் மதுவிற்பனை இல்லை
இணையம் மூலம் மது விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.


இணையம் மூலம் மது விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறியது:
இணைய மூலம் அரசு மது விற்பனை செய்யப் போவதாகக் கூறினாா்கள். அது தவறான தகவல். இணைய மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 5,425 ஆகும். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் கா்நாடகத்தில் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தமிழகத்தில் மூடியிருந்தோம் என்பதை மறந்துவிடக்கூடாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...