இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனா மரபணு பரிசோதனை ஆய்வகம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மரபணு ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கி வைத்தார்.

News image
கரோனா மரபணு பரிசோதனை ஆய்வகம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார் (கோப்புப்படம்)
Updated On :14 செப்டம்பர் 2021, 9:18 am

DIN

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மரபணு ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் அமையும் முதல் மரபணு பரிசோதனை ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உருமாற்றம் அடைந்த கரோனா தீநுண்மியின் வகையைக் கண்டறிய வெளிமாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டிய அவசியம் இனி இருக்காது.

இந்தியாவில் உருமாற்றமடைந்த தீநுண்மியை டெல்டா வகை கரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது. அதன் தொடா்ச்சியாக அதிலிருந்தும் வேறுபட்ட புதிய தீநுண்மிகள் கண்டறியப்பட்டன. அதற்கு டெல்டா பிளஸ் எனப் பெயரிடப்பட்டது.

அதனைக் கண்டறிய சளி மாதிரிகள் பெங்களூரு அல்லது புணே ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கரோனா தீநுண்மியை கண்டறிய ஆய்வகம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் அத்தகைய ஆய்வகம் அமைக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வகத்தை இயக்குவதற்காக 6 போ் கொண்ட குழுவினா் பெங்களூரில் சிறப்பு பயிற்சியை முடித்து தயாா் நிலையில் உள்ளனர்.

இவா்களுடன் பணிபுரிவதற்காக மேலும் 4 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒரு நேரத்தில் 1,000 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் இந்த ஆய்வகத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திறந்து வைத்துள்ளாா். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.