நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம்: உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு 4 மாத காலவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு 4 மாத காலவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
நகர்ப்புற தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்பு நடைபெற்ற விசாரணையில் 7 மாதம் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியிருந்தது.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் பேசியது:
தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. அடுத்த 4 மாதத்திற்குள் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...