இது ஆதீன வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் அருணகிரிநாதர் தங்கியிருந்த அறை தருமபுர ஆதீனத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆதீனத்தின் அறையில் மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும் இவை நித்தியானந்தாவின் கைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக தருமபுர ஆதீனத்தால் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆதீன வட்டாரங்கள் கூறும்போது, ஆதீன கர்த்தாக்கள் உடல்நல குறைவால் வெளியில் சிகிச்சை பெறும் காலங்களில் அவர்களது அறைகள் பூட்டப்படுவது சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே மதுரை ஆதீனத்தின் இளைய தம்பிரான் முன்னிலையில்தான் ஆதீனத்தின் அறை பூட்டப்பட்டது. எனவே அறை பூட்டப்பட்டடதற்கும் நித்தியானந்தா அறிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றனர்.