தமிழகத்தில் புதிதாக 1,916 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. பரிசோதிக்கப்பட்ட 1,60,306 மாதிரிகளில் 1,916 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,86,885 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,866 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 34 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 25,31,962 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 34,496 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 20,427 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
கோவை - 223
சென்னை - 219
ஈரோடு - 185
சேலம் - 130
செங்கல்பட்டு - 116
தஞ்சாவூர் - 112