கனமழை எச்சரிக்கை: சென்னை உள்பட 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை உள்பட 27 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு புதன், வியாழக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
கனமழை எச்சரிக்கை: சென்னை உள்பட 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை உள்பட 27 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு புதன், வியாழக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ.11-ஆம் தேதி காலை வட தமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும்.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாள்களும் மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், கடலூா், விழுப்புரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு புதன்கிழமை அதி பலத்த மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யக் கூடும்.

இது தவிர, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா், மதுரை, அரியலூா், பெரம்பலூா், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் அதி பலத்த மழையும், நீலகிரி, கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை(நவ.10) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று புதன்கிழமை (நவ.10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை, கோவை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரு நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, நாளை புதன், வியாழக்கிழமை (நவ.10,11) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com