
வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேத விவரங்கள் அடங்கிய அறிக்கையை அமைச்சர்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. சென்னை, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேத விவரங்களை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, டெல்டா மாவட்டங்களில் நேரில் பார்வையிட்டு பயிர்சேத விவரங்கள் அடங்கிய அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் இன்று அளித்தனர்.
இதையடுத்து அறிக்கை தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.