கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு

தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் ஆய்வுக் குழு நவம்பர் 21ஆம் தேதி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு

Updated On :19 நவம்பர் 2021, 10:15 am

DIN

தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் ஆய்வுக் குழு நவம்பர் 21ஆம் தேதி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் நல்ல மழைப்பொழிவை சந்தித்துள்ளது. 

அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைக் கணக்கிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு நவம்பர் 21ஆம் தேதி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 6 பேர் கொண்ட இந்தக் குழுவானது தமிழக்த்தில் நடப்பாண்டு வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடவும், கூடுதல் நிவாரண உதவிகளை அளிப்பதற்காக பரிந்துரைகளை அளிக்கவும்

தமிழகத்தில் நிகழாண்டின் போது வெள்ளப் பாதிப்பு மற்றும் மாநில நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகளை மதிப்பிட்டு, கூடுதல் மத்திய நிதியுதவியை அனுமதிப்பதற்கான இறுதி பரிந்துரைகளை அளிக்கவும் நேரில் பார்வையிட்டு அறிக்கை அளிக்க உள்ளனர்.

மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் இறுதி மதிப்பீட்டு அறிக்கையை உள்துறை அமைச்சகத்தின் பேரிடா் மேலாண்மை கோட்டத்திடம் ஒரு வாரத்திற்குள் அளிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.