ஓராண்டுக்கு மேலாக தெருக்களில் இறங்கி விவசாயிகள் போராடுவதற்கு காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மோடி அறிவித்துள்ளார். இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் மோடிக்கு நன்றி தெரிவித்துவருகின்றனர்.
"தொழிற்சங்கங்கள் எதிர்த்துப் போராடி வரும் விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமரின் உரையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த சட்டங்கள் நாட்டின் நலனுக்காக இருந்தாலும் அதற்கு எதிரான குரல்களை புறக்கணிக்க முடியாது.
இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் பேச்சுவார்த்தை, இதற்காக பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும்" என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.
மோடியின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் அதிகம் வாழும் உத்தரப் பிரதேசத்தில் குறிப்பாக மாநிலத்தின் மேற்கு பகுதியில் திருப்புமுனை ஏற்படும் என பாஜக நம்பிவருகிறது. ஆனால், வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் மீதான கோபம் லக்கிம்பூர் கெரியில் சம்பவத்தால் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தல் காரணமாகவே வேளாண் சட்டங்கள் திரும்பபெறப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மோடி அரசை நம்ப முடியக் கூடாது. தேர்தலுக்குப் பிறகு சட்டங்களை மீண்டும் கொண்டு வர வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | 115 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன
இந்த போலி வாக்குறுதி தங்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். ஆனால் மக்கள் இதையெல்லாம் புரிந்துகொண்டுள்ளார்கள். வாக்குகளுக்காக சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லக்கிம்பூர் கொலையாளிகள் எப்படி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்?
விவசாயிகள் அவர்களை துடைத்து எறிவார்கள். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. பாஜகவினர் வாக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



