சென்னையில் 50 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் இது குறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 50 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.