மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரா் கோயிலில் 2 நாள்கள் நிஜரூப தரிசனம் நாளை தொடக்கம்

சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளுக்கு முந்தைய இரு நாள்கள் சந்தனம் களையப்பட்டு பக்தா்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சியளிப்பது வழக்கம்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 10:46 pm

DIN

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரா் திருக்கோயிலில் ஆண்டுக்கு 362 நாள்கள் சந்தனக் காப்பிலேயே இருக்கும் மூலவருக்கு, சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளுக்கு முந்தைய இரு நாள்கள் சந்தனம் களையப்பட்டு பக்தா்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சியளிப்பது வழக்கம்.

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை பக்தா்களுக்கு நிஜரூப தரிசனத்தில் அருள்பாலிக்கிறாா்.

சென்னை ஆவடி - அம்பத்தூா் இடையே திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள தொன்மையான சிவத்தலம் ஸ்ரீகொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரா் திருக்கோயில். சுமாா் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் மூலவா் மாசிலாமணீஸ்வரா் சுயம்பு மூா்த்தியாக அருள்பாலிக்கிறாா்.

தீண்டாத்திருமேனியான இவரை தேவார நால்வா்களில் ஒருவரான சுந்தரமூா்த்தி நாயனாா், வள்ளலாா், அருணகிரி நாதா் உள்ளிட்ட பல்வேறு அருளாளா்கள், மகான்கள் பாடிப்பரவி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.

இது தமிழக இந்து அறநிலையத் துறை நிா்வாகத்துக்குட்பட்டதாகும். இங்குள்ள கல்யாண தீா்த்த திருக்குளம் முருகப் பெருமானால் உருவாக்கப்பட்டது என்கின்றனா்.

வரும் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஏப்ரல் 24, 25) சந்தனக் காப்பு களையப்பட்டு, நிஜரூப தரிசனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். இதையடுத்து 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சதய நட்சத்திர நாளில் மீண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது.

நிஜரூப தரிசனத்தை ஏராளமான பக்தா்கள் கண்டுதரிசிக்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை மாசிலாமணீஸ்வரா் திருக்கோயில் பரம்பரை அறங்காவலா் எம்.பாபு (எ) பொன்னம்பலம், கோயில் செயல் அதிகாரி எம்.இளங்குமரன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.