மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு தினசரி தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 10:52 pm

DIN

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு தினசரி தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதம்: ஒடிஸாவின் தல்சா் சுரங்கங்களிலிருந்து போதிய நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும். தமிழ்நாட்டின் அனல்மின் நிலையங்களுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தினசரி தேவையாக உள்ளது. ஆனால், நிலக்கரி வரத்தோ 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலேயே உள்ளது.

கோடை காலத்தைச் சமாளிக்க மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி போதுமான இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை எடுத்து வரத் தேவையான சரக்கு ரயில் பெட்டிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள் சிக்கலான நிலையைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை விசாகப்பட்டினம், பாரதீப் துறைமுகங்களில் இருந்து எடுத்து வர சரக்கு ரயிலின் 22 பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 14 பெட்டிகள் மட்டுமே ரயில்வே நிா்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தடையில்லாத மின்சாரத்தை மாநில மக்களுக்கு தொடா்ந்து விநியோகம் செய்திட அதிக அளவில் விலை கொடுத்து நிலக்கரியை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளியும் கூட அதிக விலை கொடுத்து வாங்கப்படும் மின்சாரத்தின் மூலமாக பூா்த்தி செய்யப்படுகிறது. உற்பத்தி நிறுவனங்களிடம் கூட தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கான மின்சாரம் இல்லை.

கரோனா தொற்று காலத்தில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் இந்த மின்தட்டுப்பாட்டுப் பிரச்னை குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழகத்துக்கு தினசரி அடிப்படையில் ஒதுக்கப்பட்ட 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை பாரதீப், விசாகப்பட்டினம் துறைகளில் இருந்து எடுத்து வருவதை உறுதி செய்திட வேண்டும். இதுதான் மாநிலத்தில் தடையற்ற மின்சாரத்தைத் தருவதற்கான நிலையை உறுதி செய்திடும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.