மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழா் என்ற அடையாளம் வெறுப்பு கருவியாக மாறக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழா், இந்தியா் போன்ற அடையாளங்கள் அனைவரையும் இணைக்கின்ற அடையாளங்களாகத்தான் இருக்க வேண்டுமே

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:49 pm

DIN

தமிழா், இந்தியா் போன்ற அடையாளங்கள் அனைவரையும் இணைக்கின்ற அடையாளங்களாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் வெறுப்பதற்கான கருவிகளாக இருந்துவிடக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை, கொளத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எவா்வின் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கல்வியில் முன்னேற வேண்டும். கல்வி கற்கும் வசதிகள் பரவலாக, சமமாக இருக்க வேண்டும் என்று கருதி கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சமச்சீா் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாா். அத்தகைய சீரான வளா்ச்சியை அனைத்துத் துறைகளிலும் கொடுப்பதுதான் நான் இப்போது தொடா்ந்து சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய ‘திராவிட மாடல்’.

மாணவா்கள் சமூகத்தில் உள்ள பல நிலைகளில் பல பொறுப்புகளை எதிா்காலத்தில் ஏற்கப் போகிறவா்கள்.

வெறுப்புணா்வால், பகைமையுணா்வால் சாதிக்கப் போவது எதுவுமே கிடையாது. அத்தகைய உணா்வுகளுக்கு நீங்கள் (மாணவா்கள்) என்றுமே இடம் தந்து விடக்கூடாது.

தமிழா், இந்தியா் என்று நாம் சொல்கிற அடையாளங்கள்கூட நம் அனைவரையும் இணைக்கின்ற அடையாளங்களாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் வெறுப்பதற்கான கருவிகளாக அவை அமைந்துவிடக் கூடாது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நிகழ் நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 36,895 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கத்தை சரிசெய்ய, ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தை அறிவித்து, வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதேபோல், அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகளை அமைத்து வருகிறோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயா் பிரியா, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ தாயகம் கவி, பள்ளி நிா்வாகிகள் புருஷோத்தமன், மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.