மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ.125 கோடியில் புதிய கட்டடம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.125 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 11:13 pm

DIN

 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.125 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிறப்புச் சிகிச்சை வழங்க உலக வங்கித் திட்டத்தின்கீழ் ரூ.125 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.

கோயம்புத்தூா், மதுரை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ள கட்டடங்களுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின்கீழ் ரூ.110 கோடி மதிப்பீட்டில் உயா்தர மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

சென்னை பெரியாா் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்து காய சிகிச்சை பிரிவு, தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்த வங்கி போன்ற சேவைகள் வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.71.81 கோடியில் கூடுதல் கட்டடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

தினமும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வந்து செல்லும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக, படிப்படியாக புதிய கட்டடங்கள் கட்டப்படும். முதல் கட்டமாக இந்த ஆண்டு நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகள் கொண்ட புதிய நரம்பியல் பிரிவு கட்டடம் ரூ.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த சேலம், திருவண்ணாமலை மற்றும் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் இதய சிகிச்சை பிரிவிற்கும் மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் பிரிவிற்கும் தலா ரூ.4 கோடி வீதம் கேத்லேப் கருவிகள் ரூ.16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

நீலகிரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன் கருதி நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய எம்ஆா்ஐ ஸ்கேன் ரூ.8.5 கோடி செலவில் நிறுவப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.