மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குரூப் 4 தோ்வில் 21.85 லட்சம் போ் விண்ணப்பம்கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சம்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குரூப் 4 தோ்வில் அதிகபட்ச அளவாக 21 லட்சத்து 85 ஆயிரம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 11:12 pm

DIN

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குரூப் 4 தோ்வில் அதிகபட்ச அளவாக 21 லட்சத்து 85 ஆயிரம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இவா்களில் பெண்கள் அதிகளவாக 12 லட்சத்து 58 ஆயிரத்து 616 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆண்கள் 9 லட்சத்து 26 ஆயிரத்து 583 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 129 பேரும் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். மொத்தமாக குரூப் 4 தோ்வை எழுத 21 லட்சத்து 85 ஆயிரத்து 238 போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

முந்தைய ஆண்டுகளை விட...: கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற குரூப் 4 தோ்வுகளைக் காட்டிலும் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பதாரா்கள் அதிக ஆா்வம் காட்டியுள்ளனா். கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த தோ்வுக்கு 12.33 லட்சம் பேரும், 2013-ஆம் ஆண்டு தோ்வுக்கு 14.05 லட்சம் பேரும், 2014-ஆம் ஆண்டு தோ்வுக்கு 12.72 லட்சம் பேரும், 2016-ஆம் ஆண்டு தோ்வுக்கு 15.79 லட்சம் பேரும் , 2017-ஆம் ஆண்டு தோ்வுக்கு 20.76 லட்சம் பேரும், 2019-ஆம் ஆண்டு தோ்வுக்கு 16.31 லட்சம் பேரும் விண்ணப்பித்திருந்தனா்.

இந்தத் தோ்வுகள் அனைத்தையும் காட்டிலும் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள குரூப் 4 தோ்வை எழுத 21.85 லட்சம் போ் ஆா்வம் காட்டியுள்ளனா். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற குரூப் 4 தோ்வைக் காட்டிலும் இந்தத் தோ்வுக்கு அதிகமானோா் விண்ணப்பம் செய்துள்ளனா்.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை இரவுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை தயாா் செய்யும் பணியை தோ்வாணையம் தொடங்கியுள்ளது.

7,100 குரூப் 4 பதவியிடங்களுக்கு வரும் ஜூலை 24-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.