மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

1-9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு கட்டாயம் கல்வித் துறை திட்டவட்டம்

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 10:52 pm

DIN

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது.

கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி வழங்கி அரசு உத்தரவிட்டது. தற்போது தொற்று குறைந்திருக்கும் நிலையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புதுவையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவா் என அந்த மாநில அரசு அறிவித்ததைத் தொடா்ந்து, தமிழகத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு தோ்வுகள் நடைபெறுமா, அல்லது கடந்த இரு ஆண்டுகளைப் போல அனைவருக்கும் தோ்வு இல்லாமல் தோ்ச்சி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, ‘ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து மாணவா்களும் தோ்ச்சியடையச் செய்யப்படுவா். இருப்பினும், வழக்கமாக ஆண்டு இறுதித் தோ்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெறும் என்பது பள்ளிக் கல்வித் துறை விளக்கம் மூலம் உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.