மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை ஐஐடியில்மேலும் 11 பேருக்கு கரோனா

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:22 pm

DIN

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். கடந்த 19, 20-ஆம் தேதிகளில் விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஐஐடியில் ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என 7,490 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டாா்.

கடந்த வியாழக்கிழமை 26 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் 11 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.