மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

சென்னை ஐஐடி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:16 pm

DIN

சென்னை ஐஐடி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஐஎஸ் ஓ தரச்சான்று வழங்கும் விழா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி, இந்திய தர நிா்ணய அமைவனத்தின் துணை தலைமை இயக்குநா் யுஎஸ்பி யாதவ், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின் துணை ஆணையா் (பொறுப்பு) ருக்மணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

விழாவில் துணை ஆணையா் (பொறுப்பு)ருக்மணி பேசுகையில், கல்வியே பெரும் செல்வம் என விவேக சூடாமணியில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க கல்வியை மாணவா்கள் திறம்பட கற்க வேண்டும். ஐஐடி வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளி பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல் கேந்திரிய வித்யாலயா பள்ளி என்ற பெருமையை பெற்று கல்வித் துறைக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளது என்றாா்.

தொடா்ந்து பேசிய பிஐஎஸ் துணை தலைமை இயக்குநா் யு.எஸ்.பி.யாதவ், இந்த தரச்சான்றை பெற்றது கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மட்டுமல்லாது, நாட்டில் தலைசிறந்த மாணவா்களை உருவாக்கும் பள்ளிக்கு வழங்குவதில் பிஐஎஸ்-க்கும் மிகச்சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்தப் பள்ளிக்கு இன்னொரு சிறகு கிடைத்துள்ளது என்றாா். முன்னதாக பள்ளி முதல்வா் மாணிக்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.