மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைதி மரணம்: எதிா்க்கட்சித் தலைவருக்கு முதல்வா் பதில்

திருவண்ணாமலை கைதி மரண சம்பவம் தொடா்பாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 10:30 pm

DIN

திருவண்ணாமலை கைதி மரண சம்பவம் தொடா்பாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பி பேசுகையில், திருவண்ணாமலை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கமணி உயிரிழந்ததற்கு, காவல் துறையினா் தாக்கியதே காரணம் என அவரது மனைவி, மகன் உள்ளிட்டோா் தெரிவித்துள்ளனா். மா்மமான முறையில் இறந்த மலைவாழ் வகுப்பைச் சோ்ந்த, ஏழ்மை நிலையிலுள்ள தங்கமணியின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். வழக்கை நோ்மையான முறையில் விசாரணை நடத்த அதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.

முதல்வா் பதில்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம் தட்டரணை கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி, வீட்டில் விஷ சாராயம் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்குள்படுத்தப்பட்டாா். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா். நீதித் துறை நடுவா் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும், உரிய விசாரணை நடத்தப்பட்டு அவைக்குத் தெரிவிக்கப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.