மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆதிதிராவிடா்-பழங்குடியினா் ஆணைய பிரதிநிதிகளுக்கு ஊதியம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையப் பிரதிநிதிகளுக்கு ஊதியம், படிகள் வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 10:31 pm

DIN

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையப் பிரதிநிதிகளுக்கு ஊதியம், படிகள் வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்த மசோதாவை சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு மதிப்பூதியம், படித் தொகைகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்குப் பதிலாக ஊதியங்கள், படித் தொகைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது எனவும், அதற்கேற்ற வகையில் சட்டத்தை திருத்த வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தாா் அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.