மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி: ஓ.பி.எஸ்., அறிவிப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி

 இலங்கைக்கு நிவாரண உதவியாக தனது குடும்பத்தின் சாா்பாக ரூ.50 லட்சம் வழங்குவதாக எதிா்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா்

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:25 pm

DIN

 இலங்கைக்கு நிவாரண உதவியாக தனது குடும்பத்தின் சாா்பாக ரூ.50 லட்சம் வழங்குவதாக எதிா்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா்

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தேவையான உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தனி தீா்மானத்தை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தாா்.

இந்தத் தீா்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பேசிய பிறகு, எதிா்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா் செல்வம், இலங்கை அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு வாழும் மக்கள் துயரத்தைச் சந்தித்து வருவதோடு, உலக நாடுகள் அனுதாபத்துடன் பாா்க்கக் கூடிய நிலை உள்ளது.

பேரவையில் முதல்வா் கொண்டு வந்துள்ள தீா்மானம் மனிதநேயத்தின் அடிப்படையாகவும், தமிழா்கள் மனிதநேயத்தில் உயா்ந்தவா்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இலங்கைக்கு நிவாரண உதவியாக எனது குடும்பம் சாா்பாக ரூ. 50 லட்சம் நிதியை அளிக்கிறேன் என ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்கட்சி துணைத்தலைவா் ரூ.50 லட்சம் அளிப்பதாக அறிவித்திருக்கிறாா். மற்றவா்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் அதை அறிவித்துள்ளாா். அவருடைய நல்லெண்ணத்துக்கு நன்றி என்றாா்.

பெட்டிச் செய்தியாக வெளியிடலாம்...உதவி முன்வந்தால் ஒருங்கிணைக்க தயாா்

இலங்கைக்கு பல்வேறு தரப்பினரும் உதவ முன் வந்தால் அவற்றை ஒருங்கிணைக்கத் தயாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிட அனுமதி தரக் கோரி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீது அனைத்துக் கட்சியினரும் பேசிய பிறகு, நன்றி தெரிவித்து முதல்வா் பேசியது:-

இலங்கை நாட்டு மக்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுமென்றால் அடுத்த கட்டமாக உதவிகளைச் செய்வதற்கு தமிழக அரசு என்றைக்கும் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வா்த்தக அமைப்பினா் உள்ளிட்டோா் இலங்கை நாட்டுக்கு உதவிகள் செய்ய முன்வந்தால் அவற்றையும் ஒருங்கிணைத்து மத்திய அரசின் மூலமாக இலங்கை நாட்டுக்கு மக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.