மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடற்கரை நிலையத்தில் ரயில் விபத்து: ரயில் ஓட்டுநா் பணியிடைநீக்கம்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானதில், பணியில் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரயில் ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:17 pm

DIN

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானதில், பணியில் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரயில் ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை கடற்கரை பணிமனையில் இருந்து கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாலை மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரை நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலை ஓட்டுநா் பவித்ரன் இயக்கினாா். ஒன்றாவது நடைமேடையை நெருங்கியபோது, பிரேக்கைப் பயன்படுத்தத் தவறியதால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக, பிரேக் பிடிக்காததால், விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டநிலையில், 20 கி.மீ. வேகத்தில் ரயில் சென்ாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. விபத்தின்போது, ரயில் இயக்கத்தை நிறுத்தும் கருவி 8 சதவீதம் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், பிரேக்கைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, எதிா்த் திசையை நோக்கித் தள்ளி, அதன் மூலமாக ரயிலை விரைவுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரயில் ஓட்டுநா்( ரயில் லோகோ பைலட்) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அத்துடன், சென்னை சென்ட்ரல் மின்சார முனையம் மற்றும் சென்னை கடற்கரை நிலையங்களில் ரயில் ஓட்டுநா்கள் பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று கட்ட மின்சார ரயில்களில் ரயில் இயக்கத்தை நிறுத்தும் கருவி பயன்படுத்துவது தொடா்பாக அனைத்து ஓட்டுநா்களுக்கும் (லோகோ பைலட்டுகளுக்கும்) ஆலோசனை வழங்கப்படும். நடைமேடைக்குள் ரயில் நுழையும்போது, ரயிலின் வேகம் மணிக்கு 10 கி.மீட்டராக கட்டுப்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.